செய்திகள் திண்டுக்கல் மாவட்ட செய்திகள் சைவ உணவகத்தில் புழு சாம்பாரா….? அதிர்ந்து போன விவசாயி….!! Revathy Anish20 July 20240101 views திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் உணவு சாப்பிட சென்ற விவசாயிக்கு வழங்கப்பட்ட தோசையில் ஊற்றப்பட்ட சாம்பாரில் புழு நெளிந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாயி உணவக உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அந்த காணொளியில் கெட்டுப்போன ரொட்டி வழங்கப்பட்டதாகவும், அதனைக் கூறிய பிறகு கடை ஊழியர் எடுத்துச் சென்றதாகவும் கூட சாப்பிட சென்றவர் கூறுவது பதிவாகியுள்ளது.