105
தமிழகத்தில் ஆளுநராக உள்ள ஆர்.என். ரவியின் பதவிக்காலம் ஜூலை 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் பதவி நீட்டிப்பு குறித்து இதுவரை எவ்வித உத்தரவு வரவில்லை. எனவே தமிழக ஆளுநர் ரவி தற்போது டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இவர் ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பதவி நீட்டிப்பு குறித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் டெல்லி சென்ற ஆளுநர் வருகின்ற 21ம் தேதி மீண்டும் சென்னை வந்தடைவார் என கூறப்படுகிறது.