செய்திகள் மாநில செய்திகள் கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகள் எப்போது முடிவடையும்…? அமைச்சர் சேகர் பாபு பதில்…!! Revathy Anish22 July 20240118 views சென்னை அருகே உள்ள முடிச்சூர் பகுதியில் ஆம்னி பேருந்து நிலைய பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகள் முடிவடையும் என கூறினார். மேலும் ரயில்வே துறை அதிகாரிகளுக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. எனவே விரைவில் ரயில் நிலைய பணிகள் முடிவடையும் என அவர் தெரிவித்துள்ளார்.