செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம் களைகட்டிய விக்கிரவாண்டி தொகுதி… இறுதிகட்ட பிரச்சாரம்… அரசியல் கட்சியினர் தீவிரம்…!! Revathy Anish8 July 20240110 views விழுப்புரம் மாவட்டம் விக்கிரவண்டியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து பல அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரச்சாரத்தை முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் விக்கிரவண்டியில் இறுதி கட்ட பிரச்சாரம் களைக்கட்டியுள்ளது. தி.மு.க., நாம் தமிழர்கள் கட்சி, பா.ம.க., சுயேச்சை வேட்பாளர் ஆகியோரை ஆதரித்து பல அரசியல் தலைவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.