செய்திகள் தேனி மாவட்ட செய்திகள் மீண்டும் திறக்கப்பட்ட அருவி… குவிந்த சுற்றுலா பயணிகள்… பாதுகாப்பு பணியில் போலீசார்…!! Revathy Anish7 July 2024082 views தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கனமழை பெய்த நிலையில் கோம்பைத்தொழு பகுதியில் உள்ள மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில் தற்போது அருவியில் நீர்வரத்து குறைந்ததால் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏரளாமானோர் வந்து அருவியில் குளித்து செல்கின்றனர். மேலும் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகமானதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.