பிரச்சாரத்தில் விதி மீறல்… தி.மு.க. பா.ம.க. நிர்வாகிகள் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு…!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இறுதி பிரச்சாரம் இன்று முடிவடைய உள்ளது. மேலும் வாக்கு சேகரிப்பின் போது தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் அரசியல் கட்சியினர் பலரும் கட்சிக்கொடி கம்பங்களை நட்டது, விளம்பர பதாகை வைத்தது, கொடி தோரணங்களை கட்டியது என பல விதிகளை மீறியுள்ளனர்.

அதன் அடிப்படையில் போலீசார் நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் நாராயணசாமி, தி.மு.க. நகர இளைஞரணி செயலாளர் கலைச்செல்வன், நிர்வாகிகள் தேவேந்திரன், குணசேகரன், தி.மு.க. கிளை செயலாளர் ராகுல், முருகன், தி.மு.க. நிர்வாகி புஷ்பா, பா.ம.க கிளை செயலாளர்கள் மதியழகன், விஜயகுமார், பா.ம.க. நிர்வாகி கணேசன், விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி சுந்தரவளவன் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!