கன்னியாகுமரி செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாடி கொண்டிருந்த சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்ற வியாபாரி… போக்சோவில் கைது…!! Revathy Anish25 July 20240149 views கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியில் பீர்முகமது(60) என்பவர் வசித்து வருகிறார். மீன் வியாபாரியான இவர் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பயந்த சிறுமி அங்கிருந்து உடனடியாக அவரது வீட்டிற்கு ஓடியுள்ளார். இது குறித்து சிறுமி அவரது பெற்றோரிடம் கூறினார். இதற்கிடையே பீர்முகமது வீட்டில் இருந்து தப்பி ஓடி உள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் தப்பியோடிய பீர்முகமதை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.