செய்திகள் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள் வகுப்பறையில் இருந்த பாம்பு… அலறிய மாணவர்கள்… பள்ளியில் பரபரப்பு…!! Revathy Anish16 August 20240141 views புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரின் மையப்பகுதியில் நகராட்சி கிழக்கு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று மாலையில் வகுப்பறையில் இருந்த கரும்பலகையின் மேல் பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனை பார்த்த பள்ளி மாணவர்கள் உடனடியாக கூச்சலிட்டு கொண்டு வகுப்பறையில் இருந்து வெளியேறினர். இது குறித்து ஆசிரியர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அறந்தாங்கி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாம்பை பத்திரமாக பிடித்தனர். மேலும் பள்ளி அருகே குட்டைகுளம் இருப்பதால் அங்கிருந்து பாம்பு வெளியேறி பள்ளிக்குள் புகுந்து இருக்கலாம் என ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதனால் பள்ளியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.