செய்திகள் திருநெல்வேலி மாவட்ட செய்திகள் தொடரும் மர்ம வழக்கு… இதுவரை 50 பேரிடம் விசாரணை… சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் தகவல்…!! Revathy Anish26 June 2024084 views நெல்லை மாவட்டத்தில் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவராக பணியாற்றி வந்த கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் கடந்த மாதம் திடீரென மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் அவர் கடிதத்தில் குறிப்பிட்ட நபர்கள் உள்பட இதுவரை சுமார் 50 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதன்படி தற்போது காங்கிரஸ் கட்சியை சார்ந்த பெண் நிர்வாகி உள்பட 2 பேரை ஆஜர் படுத்தி விசாரித்து வருகின்றனர். மேலும் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் இந்த வழக்கில் சம்மந்தமான முக்கிய ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். ஆகவே ஜெயக்குமார் தனசிங் உடற்கூறாய்வு இறுதி அறிக்கைகள் இன்னும் அதிகாரிகளுக்கு கிடைக்காததால் வழக்கில் இறுதி முடிவு எடுக்க முடியாமல் இருப்பதாக கூறப்படுகிறது.