கள்ளக்குறிச்சி செய்திகள் மாவட்ட செய்திகள் பாடத்தை கவனித்த ஆட்சியர்… பள்ளியில் திடீர் ஆய்வு… பொதுமக்கள் கோரிக்கை…!! Revathy Anish18 July 20240110 views கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் நடைபெற்ற சிறப்பு திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கலந்து கொண்டார். இதனையடுத்து அவர் அம்மையகம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சென்று பள்ளிகளை ஆய்வு செய்ததுடன் 6-ஆம் வகுப்பில் மாணவர்களுடன் ஒருவராக அமர்ந்து பாடத்தை கவனித்தார். இதனைத்தொடர்ந்து சின்னசேலம் மற்றும் பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். மேலும் பொதுமக்கள் தங்களது குறைகளை அவர்கள் ஊரில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் சென்று தெரிவிக்கலாம் என்றும், விரைவில் அதற்க்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.