செய்திகள் திண்டுக்கல் மாவட்ட செய்திகள் பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து… 2 பேர் பலி… திண்டுக்கல் அருகே சோகம்…!! Revathy Anish25 August 2024086 views திண்டுக்கல் மாவட்டம் ஆவிச்சிப்பட்டி பகுதியில் தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் இன்று அதிகாலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர விபத்தில் சிவகாசியை சேர்ந்த தொழிலாளர்கள் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் பட்டாசு ஆலையில் உயிரிழந்த மற்ற நபர்களின் அடையாளங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள பட்டாசு ஆலை உரிமையாளர் செல்வம் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.