செய்திகள் திருநெல்வேலி மாவட்ட செய்திகள் தடயங்கள் கிடைக்காமல் அவதி… ஜெயக்குமார் மரண வழக்கு… திமுக நிர்வாகியிடம் விசாரணை…!! Revathy Anish26 July 20240134 views திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே ஜெயக்குமார் 2 மாதங்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளது. இது குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெய்குமாருக்கு நெருங்கிய நபர்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் என பட பலரிடமும் விசாரணை நடத்தியதில் எவ்வித தடயங்களும் கிடைக்கவில்லை. இந்நிலையில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜோசப் பெல்சி என்பவரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஜெயக்குமார் அவர்கள் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருந்த ஆனந்தராஜா என்பவர் குறித்தும், ஜெயக்குமாருக்கும் அவருக்கும் எத்தனை வருடம் பழக்கம் இருந்தது என தொடர்பாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.