செய்திகள் தேசிய செய்திகள் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்து… துடிதுடித்து இறந்த 5 பேர்… கண்ணாடி தொழிற்சாலையில் பயங்கரம்… Revathy Anish29 June 20240110 views தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் ஷாட்நகரில் மிகவும் பிரபலமான கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சம்பவத்தன்று வழக்கம்போல தொழிற்சாலை இயங்கி கொண்டிருந்தபோது தீடிரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த 15 பேரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து அப்பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.