செய்திகள் மாநில செய்திகள் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சு வலி… மருத்துவமனையில் அனுமதி…!! Revathy Anish21 July 20240137 views சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரது தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று மதிய உணவு சாப்பிட்ட பின் செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனை அறிந்த அதிகாரிகள் செந்தில் பாலாஜியை பாதுகாப்பாக ராயப்பேட்டையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.