செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள் பலத்த காற்றுடன் மழை… திருப்பி அனுப்பட்ட விமானங்கள்… பயணிகள் அவதி…!! Revathy Anish4 July 20240106 views சென்னையில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் கோவையில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானம் தரை இறங்க முடியாமல் பெங்களூருவுக்கு அனுப்பப்பட்டது. இதேபோது 2 விமானங்கள் தரையிறக்க முடியாமல் தவித்த நிலையில், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு புறப்படும் விமானங்களும் வெகு நேரம் காத்திருந்து தாமனம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் உறவினர்களை வரவேற்ற காத்திருந்தவர்களும் அவதியடைந்தனர்.