செய்திகள் மாநில செய்திகள் புதிய மேயர் தேர்தெடுக்க உத்தரவு… நெல்லை, கோவையில் அடுத்த மேயர் யார்…? Revathy Anish25 July 20240108 views நெல்லை மற்றும் கோவை மாவட்ட மேயராக இருந்த கல்பனா, சரவணன் ஆகிய இருவரும் கடந்த 3-ஆம் தேதி தங்களது பதவியை திடீரென ராஜினாமா செய்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் காலியாக உள்ள மாவட்ட மேயர் பதவிக்கான தேர்தல் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் மாவட்ட தேர்தல் ஆணையம் நெல்லை மற்றும் கோவை மேயர் பதவிகளுக்கு மாநகராட்சி கூட்டத்தை நடத்தி மறைமுக தேர்தல் மூலம் புதிய மேதை தேர்ந்தெடுக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.