103
மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணியில் உள்ள ஆம்னி பேருந்து அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் நிறுவனத்தில் பணிபுரியும் பேருந்து டிரைவரை தாக்கியுள்ளனர். அவரை அலுவலக ஜன்னலில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியதை சிலர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டனர்.
இது குறித்து அலுவலக ஊழியர் அந்த டிரைவர் பயணிகளிடம் அதிக பணத்தை போன் மூலம் ரகசியமாக பெற்றதால் தாக்கியதாக தெரிவித்தனர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்த நிலையில் காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.