செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் துரைமுருகன்… நலமுடன் வீடு திரும்பினார்…!! Revathy Anish14 July 2024078 views விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அப்போது ஆரம்பத்தில் இருந்தே தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். இதனை கொண்டாடும் விதமாக தி.மு.க தொண்டர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடினர். இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அங்கு வந்தனர். அப்போது துரைமுருகன் அவர்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை உடனடியக அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து சென்று தீவிர சிகிச்சை அளித்தனர். தற்போது அவர் சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.