செய்திகள் மாநில செய்திகள் மைக்ரோசாப்ட் கோளாறு…. இன்று வரை டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்…. வெளியான தகவல்….!! Revathy Anish20 July 20240113 views செப்டம்பர் 14 அன்று குரூப்-2 2ஏ தேர்வு நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று ஏற்பட்ட மைக்ரோசாப்ட் மென்பொருள் கோளாறு காரணமாக இணையதளத்தில் விண்ணப்பிக்கவும், கட்டணங்களை செலுத்தவும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுத விரும்புபவர்கள் இன்று வரை விண்ணப்பிக்கலாம் என்று கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.