செய்திகள் திருநெல்வேலி மாவட்ட செய்திகள் நெல்லை மேயர் ராஜினாமா செய்ய போகிறாரா? வெளிவந்த தகவலால் சர்ச்சை…!! Revathy Anish2 July 2024090 views திருநெல்வேலி மாவட்ட மேயராக திமுகவை சேர்ந்த பி.எம். சரவணன் பொறுப்பேற்றதில் இருந்து ஒவ்வொரு மாதமும் நடக்கும் மாநகராட்சி கூட்டத்தில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டு வருவது வழக்கமாகி விட்டது. இதேபோல் சில மாதங்களுக்கு முன்பு நடந்த கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் கலந்துகொள்ளத்தல் மாநகராட்சி கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பி.எம் சரவணன் சென்னைக்கு சென்றிருப்பதால் அவர் பதவியை ராஜினாமா செய்ய தலைமையகத்தில் கடிதம் வழங்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது. இதுகுறித்து அதிகார அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனாலும் இந்த தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.