செய்திகள் திருச்சிராப்பள்ளி மாவட்ட செய்திகள் “திருச்சியில் தலைகள் சிதறும்”… இன்ஸ்டாகிராமில் மிரட்டல்… வைரலாகும் வீடியோ…!! Revathy Anish23 July 20240131 views புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் தைல மரக்காடு பகுதியில் கடந்த 11ம் தேதி திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி துரைசாமி என்பவர் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து அவரது உறவினர்கள் நீதிமன்றத்தில் விசாரணை தேவை என மனு அளித்திருந்தனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் ரவுடி துறையின் புகைப்படத்துடன் மிரட்டல் வீடியோ ஒன்று iவெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் “திருச்சியில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு தலைகள் சிதறும்” என குறிப்பிடப்பட்டு ரவுடி துறையின் இறுதி சடங்கின்போது எடுத்த புகைப்படங்கள் இருந்தது. வலியால் நாங்கள் துடித்து கொண்டிருக்கிறோம் என்று இருந்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனதை தொடர்ந்து காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.