கள்ளக்குறிச்சி செய்திகள் மாவட்ட செய்திகள் முக்கிய குற்றவாளி வாக்குமூலம்… பெட்ரோல் பங்கில் 2,000 லிட்டர் மெத்தனால்… அதிகாரிகள் அதிரடி சோதனை…!! Revathy Anish4 July 20240100 views கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் கைதான மாதேஷ் என்பவரிடம் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் மெத்தனால் மற்றும் சாராயத்தை பதுக்கி வைத்திருப்பதாக கூறியுள்ளார். அவர் வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறையினர் அந்த பெட்ரோல் பங்கிற்கு சென்று தீவிர சோதனை நடத்தியதில் மண்ணுக்கு கீழ் புதைக்கப்பட்டிருந்த 2,000 லிட்டர் மெத்தனாலை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அந்த பெட்ரோல் நிலையத்திற்கு தற்காலிகமாக சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் சோதனை நடத்தி வருகின்றனர்.