செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள் சீக்கிரம் புக் பண்ணுங்க… இன்னும் 2 நாட்களே உள்ளது… தீபாவளி ரயில் முன்பதிவு தொடக்கம்…!! Revathy Anish30 June 2024086 views வருகின்ற அக்டோபர் மாதம் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் வெளியூர்களில் இருந்து சென்னையில் வேலை பார்த்து வரும் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அப்படி செல்பவர்கள் பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவு என்பதால் பலர் ரயில் நிலையத்திற்கு படை எடுத்து வருவார்கள். அதன் அடிப்படையில் தீபாவளிக்கு பண்டிகையையொட்டி 28,29,30 தேதிகளில் பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயிலில் முன்பதிவு செய்து வசதி திறக்கப்பட்டுள்ளது. 28 ஆம் தேதி பயணம் செய்பவர்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கிய சில நொடிகளிலேயே அனைத்து இருக்கைகளும் பதிவாகி விட்டது. எனவே 29-ஆம் தேதி பயணம் செய்பவர்கள் நாளையும், 30 ஆம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் நாளை மறுநாளும் ரயிலில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் பயணிகளின் முன்பதிவு எண்ணிக்கைகளை கொண்டு கூடுதல் ரயில் பெட்டிகள் அல்லது சிறப்பு ரயில் குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.