செய்திகள் சென்னை மாநில செய்திகள் தாக்கிக்கொண்ட வழக்கறிஞர்… மருத்துவமனையில் சிகிச்சை… எழும்பூர் நீதிமன்றத்தில் பரபரப்பு…!! Revathy Anish20 July 20240125 views எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் எழும்பூர் நீதிமன்ற வக்கீல்கள் இடையே வழக்குகளை மாற்றுவதில் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். 15க்கும் மேற்பட்ட வக்கீகள் மோதலில் ஈடுபட்ட நிலையில் அங்கிருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி வைத்தனர். இதனையடுத்து மோதலில் காயமடைந்த வக்கீல்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பிற்க்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.