இராமநாதபுரம் செய்திகள் மாவட்ட செய்திகள் மேலும் 10 பேர்கைது… இலங்கை கடற்படையின் அட்டகாசம்… அதிர்ச்சியில் மீனவ மக்கள்…!! Revathy Anish23 July 20240106 views ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகுகள் மூலம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது நெடுந்தீவு அருகே ரோந்து பணிகள் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்தனர். இதனையடுத்து அவர்களது விசைப்படகுகளையும் பறிமுதல் செய்யப்பட்டு மீனவர்களை காங்கேயன் துறைமுகத்தில் அழைத்து சென்று சிறையில் அடைத்துள்ளனர். ஏற்கனவே தமிழக மீனவர்கள் இதேபோல் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 10 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து மீனவர்களை விடுவிக்க வேண்டும் என மீனவ கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.