சினிமா செய்திகள் தமிழ் சினிமா “வேள்பாரி” படம் குறித்த சூப்பர் அப்டேட் கொடுத்த ஷங்கர்… எதிர்பார்ப்பின் உச்சத்தில் ரசிகர்கள்…!!! Inza Dev11 July 20240105 views தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் சங்கர். இவர் இயக்கத்தில் ”இந்தியன் 2” திரைப்படம் ரிலீசாக உள்ளது. இதனைத்தொடர்ந்து, விரைவில் இந்தியன் 3 திரைப்படமும் வெளிவர உள்ளது. மேலும், இவர் இயக்கத்தில் ராம்சரனின் கேம் சேஞ்சர் திரைப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இந்தியன் 2 படத்தின் ப்ரோமோஷன் விழா நடைபெற்றது. அதில், பங்கேற்ற இயக்குனர் சங்கரிடம் ”வேள்பாரி” படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்தவர் ”நிறைய பேர் என்னை அந்த கதையை படிக்க சொன்னார்கள். அந்த சமயத்தில் எனக்கு நேரம் கிடைக்கவில்லை. எனவே கொரோனா காலத்தில் வீட்டில் சும்மா இருந்த பொழுது அந்த கதையை படிக்க தொடங்கினேன். படிக்கும் போதே என் மனதில் அந்தப் படத்தின் காட்சிகள் விரிந்தது. படித்து முடித்ததும் அதை எழுதிய சு.வெங்கடேசன் அவர்களிடம் அதற்கான உரிமம் வாங்கி விட்டேன். இந்த திரைப்படம் 3 பாகங்களாக எழுதி முடித்து விட்டேன். யாரு நடிக்கிறார்கள் என்பதை இன்னும் முடிவு பண்ணவில்லை” என கூறியுள்ளார்.