அரசியல் செய்திகள் செய்திகள் தேசிய செய்திகள் விசாரணைக்கு வந்த அரவிந்த் கேஜ்ரிவால் வழக்கு…. மூன்று நாள் சிபிஐ காவலுக்கு உத்தரவு….!! Inza Dev27 June 20240100 views மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்து திகார் ஜெயிலில் அடைத்தது. அதன் பிறகு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அமலாக்கத்துறை உயர் நீதிமன்றத்தில் நாடியதால் ஜாமீனுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரவிந்த் கேஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தை நாடினார். இன்று விசாரணைக்கு வந்த அரவிந்த் கேஜ்ரிவாலின் வழக்கை விசாரித்த நீதிபதி மூன்று நாள் சிபிஐ காவலில் கேஜ்ரிவாலை விசாரிக்க உத்தரவிட்டார்.