செய்திகள் மாநில செய்திகள் வயநாடு நிலச்சரிவு…கர்நாடகா அரசு சார்பில் 100 வீடுகள்…!!! Sathya Deva3 August 20240148 views வயநாட்டின் நில சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா ஆகியோர் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். இதை அடுத்து அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் சார்பில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று முன்னாள் வயநாடு எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார். இந்நிலையில் வயநாடு நிலச்சரிவு பேரிடரில் பாதிக்கப்பட்டோரின் துயர் துடைக்கும் விதமாக 100 வீடுகள் கர்நாடக அரசு சார்பில் கட்டி தரப்படும் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.