உலக செய்திகள் செய்திகள் லிபியா நாட்டில்…மீண்டும் இந்திய தூதரகம்…!!! Sathya Deva25 July 20240106 views லிபியா நாட்டின் கிளர்ச்சியாளர்களின் போராட்டம், இராணுவத்தின் அடக்குமுறை தாக்குதல் என போர்க்களமாக காட்சியளித்தது. அங்கு சிக்கி தவித்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினையால் லிபியாவில் செயல்பட்டு வந்த இந்திய தூதரகத்தை 2019 ஆம் ஆண்டு இந்திய அரசு மூடியது. இந்த நிலையில் ஐந்தாண்டுகளுக்கு பிறகு லிபியா தலைநகர் திரிபோலியில் இந்திய தூதரகம் திறக்கப்பட்டது. இந்த தூதரகத்தில் லிபியா குடிமக்களுக்கு விசா வழங்குதல் மற்றும் இந்திய வெளிநாட்டிற்கான வேலை நிலைமைகளை சரிபார்த்தல் போன்ற பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.