மத்திய பிரதேசம்…காதலை மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு…!!!

மத்திய பிரதேசம் ஜபல்பூரில் 42 வயது ஆன சப்னா யாதவ் என்ற பெண்ணை நரேந்திர பஞ்சாபி என்பவர் காதலித்து வந்துள்ளார். சப்னா என்பவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்தது. இதனால் நரேந்திர பஞ்சாபி அவரின் காதலை ஏற்கவில்லை என கூறப்படுகிறது. ஆனால் தொடர்ந்து சப்னாவை தொந்தரவு செய்ததால் அவர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதை அடுத்து கோபம் அடைந்த நரேந்திர பஞ்சாபி பூக்கடையில் வேலை செய்து வந்த சப்னா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததோடு அவர் மீதும் பெட்ரோலை ஊற்றி அவர் தீ வைத்துள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நரேந்திர பஞ்சாபி மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மருத்துவமனை சிகிச்சைக்கு பிறகு அவர் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்தார் என கூறப்படுகிறது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!