செய்திகள் மாநில செய்திகள் நியூஸ் எடுக்க சென்ற பத்திரிக்கையாளர்…. வெள்ளத்தில் சிக்கியதால் பரபரப்பு….!! Sathya Deva17 July 20240111 views அசாமில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களின் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றது. வெள்ளத்தில் சிக்கி 96 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 5.98 லட்சம் மக்கள் வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த பாதிப்பு குறித்து ஆற்றில் கிராம மக்கள் சூழ நின்று தொலைக்காட்சி பத்திரிக்கையாளர் செய்தி வழங்கிக் கொண்டு இருந்தார். அப்போது பத்திரிக்கையாளர் ஆற்றில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் நின்று கொண்டிருந்த இடம் ஆற்றில் ஈரமான மணல் பகுதி என்பதால் நிலை தடுமாறினார் எனவும் கூறப்படுகிறது பின்பு அங்கு உள்ள மக்கள் அவரை மீட்டு உள்ளனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.