செய்திகள் மாநில செய்திகள் தமிழகத்தை சேர்ந்த 23 மீனவர்கள்…இலங்கை கடற்படையால் கைது…!!! Sathya Deva8 August 20240119 views தமிழகத்தை சேர்ந்த 23 மீனவர்கள் மற்றும் 4 நாட்டுப் படகுகளை இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. புத்தாளம் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படை சிறைபிடித்தது என கூறப்படுகிறது. இந்த இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையால் தமிழக மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.