தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவர் தற்போது இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடித்துள்ள படம் ”தங்கலான்”. இந்த படத்தில் மாளவிகா மோகன், பசுபதி, பார்வதி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படம் குறித்து நடிகர் சூர்யா சமூக வலைதளபக்கத்தில் ”தங்கலான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடையும்” என வாழ்த்தியுள்ளார். இவரின் இந்த பதிவ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.