உலக செய்திகள் செய்திகள் டெல்லி வந்தார் மனு பாக்கர்…உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்…!!! Sathya Deva7 August 20240123 views பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவிற்காக இரண்டு பதக்கங்களை வென்றெடுத்த விராங்கனை மனு பாக்கர் நாடு திரும்பி உள்ளார். இவர் ஏர் இந்தியா விமான மூலம் பாரிஸில் இருந்து டெல்லிக்கு இன்று காலை வந்தார். மனுவின் குடும்பத்தார் உட்பட நூற்றுக்கணக்கானோர் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் காலையிலிருந்து காத்திருந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து மனு பாக்கர் அவருடன் வந்த பயிற்சியாளர் ஐஸ்பால் ராணாவுக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மக்களின் வரவேற்பினால் நெகிழ்ந்த மனு பாக்கர் இங்கு எனக்கு இவ்வளவு அன்பு கிடைத்தது மகிழ்ச்சி அளித்தது என்று தெரிவித்துள்ளார். முன்னதாக பாரிஸ் ஒலிம்பிக் பெண்கள் பத்து மீட்டர் ஏர் பிரிஸ்டல் துப்பாக்கி சுடுதல் ஒற்றைய போட்டியில் வெண்கலம் வென்ற மனு பாக்கர் மேலும் 10 மீட்டர் பிரிஸ்டல் இரட்டையர் பிரிவில் சரபோஜித் சிங்குடன் சேர்ந்து வெண்கலம் பெற்றது குறிப்பிடத்தக்கது.