செய்திகள் மாநில செய்திகள் சொத்துவரி உயர்வு…வணிகர் சங்கம் எதிர்ப்பு…!!! Sathya Deva29 September 2024083 views சொத்துவரி உயர்வுக்கு வணிகர் சங்க பேரமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதன் படி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம் விக்ரம ராஜா பதிவு என்று வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தின் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சொத்துவரி பல மடங்காக உயர்த்தப்பட்டது. வணிக கட்டிடங்கள் கூடுதலாக வரி விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதனால் மக்கள் மீண்டும் வர இயலாத முறையில் இருந்து வருகின்றனர். சென்னை மாநகராட்சியின் சொத்துக்களின் மீதான ஆறு சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. இது வணிகர்களுக்கு பெரும் சுமையாக கருதப்படுகிறது. வணிகர்கள், பொதுமக்கள் மத்தியில் சுமையாக உருவாக்கும். எனவே உடனடியாக சொத்துவரி உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.