சென்னை மாவட்ட செய்திகள் சென்னை நோக்கி படையெடுக்கும் வாகனங்கள்…. திணறிய தலைநகரம்….!! Inza Dev22 July 20240103 views செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். வார விடுமுறையை ஒட்டி சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு சென்ற மக்கள் விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பினர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து கொண்டு இருந்ததால் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.