சினிமா செய்திகள் தமிழ் சினிமா சூப்பர்! “டிமான்ட்டி காலனி 2” வெற்றியை தொடர்ந்து புதிய படத்தில் இணைந்த அருள்நிதி… இயக்குனர் யார் தெரியுமா.. ? Sowmiya Balu24 August 2024090 views தமிழ் சினிமாவில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் டிமான்டி காலனி. இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சாம்.சி எஸ் இசையமைத்துள்ள இந்த படம் வெளியாகி ரசிக மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்நிலையில். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் பம்பர் படத்தின் இயக்குனர் எம் செல்வகுமாருடன் புதிய படத்தில் இணையவுள்ளார். இந்த படம் வித்தியாசமான கதை அம்சத்தில் உருவாகி இருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.