சினிமா செய்திகள் தமிழ் சினிமா காசுக்காகவே அந்த படத்தில் நடித்தேன்… மனம் திறந்த நடிகை பிரியா ஆனந்த்…!!! Sowmiya Balu3 August 20240173 views தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியா ஆனந்த். இவர் தமிழ் மொழி படங்களில் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு என மற்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். லியோ படத்தில் நடித்திருந்த இவர் தற்போது பிரசாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் அந்தகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆகஸ்ட் 9ஆம் தேதி ரிலீசாகும் இந்த படத்தின் பிரமோஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியா ஆனந்திடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது காசுக்காக வேற வேலை எதுவும் பார்த்தீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்தவர், காசுக்காகவே ஒரு படத்தில் நடித்தேன் எனவும் அந்த நேரத்தில் வீட்டுக்காக லோன் கட்ட வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் அந்த படத்தில் நடித்தென் என அவர் கூறியுள்ளார்