உலக செய்திகள் செய்திகள் ஒலிம்பிக் போட்டி நிறைவு விழா…மனு பாக்கர்,கீப்பர் ஸ்ரீஜேஷ் இந்திய தேசியக் கொடியை ஏந்திச்செல்ல அனுமதி…!!! Sathya Deva9 August 20240113 views ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளில் இருந்து 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் இந்தியா துப்பாக்கி சுடுதலில் 3 வெண்கலம், ஹாக்கியில் ஒரு வெண்கலம் மற்றும் ஈட்டி எறிதலில் ஒரு வெள்ளி என 5 பதக்கங்களை வென்றுள்ளது. தனிநபர் பிரிவில் மனு பாக்கர் மற்றும் ஸ்வப்னில் குசாலே தலா ஒரு வெண்கலமும், இரட்டையர் பிரிவில் மனு பாக்கர்-சரப்ஜோத் சிங் ஒரு வெண்கலமும் வென்றுள்ளனர். இதற்கிடையே, ஒலிம்பிக் நிறைவு விழாவில் இரட்டை வெண்கலம் வென்ற மனு பாக்கர் மற்றும் ஹாக்கி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்வார் என இந்திய ஒலிம்பிக் கமிட்டிதெரிவிக்கப்பட்டது.