செய்திகள் மாநில செய்திகள் உத்தரப்பிரதேசம்…ஆட்டோ கட்டணம் கேட்டு வாக்குவாதம்…உயிரிழந்த நண்பன்…!!! Sathya Deva20 August 2024057 views உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சைஃப் அலி மற்றும் சக்கன் அலி அண்மையில் மும்பைக்கு குடிபெயர்ந்து ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் மது அருந்துவதற்காக நண்பர்கள் இருவரும் ஆட்டோவில் சென்றுள்ளனர். அப்போது ஆட்டோ கட்டணம் 30 ரூபாயை யார் கொடுப்பது என்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் கைகலப்பாகி சக்கனை சைஃப் கீழே தள்ளியுள்ளார். அப்போது தலையில் அடிபட்டு சக்கன் அலி உயிரிழந்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சைஃப் அலியை கைது செய்தனர்.