இந்திய கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளரா…? மனோலோ மார்க் நியமனம்…!!!

உலகக்கோப்பை தகுதி சுற்றின் இரண்டாவது சுற்றில் இந்திய ஆண்கள் கால்பந்து அணி தோல்வி அடைந்தது. இதனால் மூன்றாவது சுற்றுக்கு வர தவறியது என கூறப்படுகிறது. இதில் கத்தார் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இந்திய அணியை தோல்வி பெற செய்தது. இதனால் இந்தியா அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த இகோர் ஸ்டிமாக் கடந்த மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்காக 20க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் இந்திய ஆண்கள் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்பெயினை சேர்ந்த மனோலோ மார்க் என்பவரை நியமனம் செய்ய அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு உத்தரவிட்டது. இவர் தற்போது எப்.சி கோவா அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!