செய்திகள் திருப்பூர் ஆட்டோவில் மோத வந்த நபர்…. சரமாரியாக தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!! Sathya Deva13 July 20240100 views திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கரைப்புதூர் பகுதியை சேர்ந்த அழகு என்பவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். இவர் தனது ஆட்டோவை எடுத்துக் கொண்டு புறப்பட போகும்போது இளங்கோ என்பவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து ஆட்டோ மீது மோதுவது போல நின்றுள்ளார். இதைப் பார்த்த அழகு “பார்த்து போக வேண்டியது தானே” என்று கூறியுள்ளர்.இதனால் ஆத்திரம் அடைந்த இளங்கோ அழகுவே தாக்கி காயம் ஏற்படுத்தினார் . இந்த பிரச்சினையால் அங்கு வந்த ஆட்டோ ஓட்டுநர்கள் இளங்கோவுடன் சமாதானமாக பேசியுள்ளனர். ஆனால் இளங்கோ அவர்களை தர குறைவாக பேசியயுள்ளார் .இதனால் கோபம் அடைந்த ஆட்டோ டிரைவர்கள் அனைவரும் சேர்ந்து இளங்கோவை சரமாரியாக தாக்கினார் .இது குறித்து தகவல் அறிந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . மேலும் CCTVயில் பதிவான இந்த காட்சி தற்போது வெளியாகி சமூக வலைதளங்களின் பரவி வருகிறது.