செய்திகள் மாநில செய்திகள் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு…வருகிற 23-ந் தேதிக்கு ஒத்தி வைப்பு…!!! Sathya Deva14 August 20240113 views டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. கைது செய்ததற்கு எதிராக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். கெஜ்ரிவால் மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. இந்த வழக்கு விசாரணை வருகிற 23-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.