சினிமா செய்திகள் தமிழ் சினிமா ‘அன்பை விதைக்கிறதுக்கான முயற்சி தான்’ “மெய்யழகன்”… இயக்குனர் ராம்குமார் ஓபன் டாக்…!!! Sowmiya Balu3 August 20240158 views தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் தற்போது மெய்யழகன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, சுவாதி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் பற்றி இயக்குனர் பிரேம்குமார் கூறியதாவது, ‘அடிப்படையான அன்பை பற்றி பேசுகிறது இந்த படம். அன்பை விதைக்கிறதுக்கான முயற்சி தான் என் முதல் வேலை. மத்ததெல்லாம் அப்புறம்தான். மேலும், நாம் பேச வேண்டாம் என நினைத்தவர்கள் கிட்ட மன்னிப்பு கேட்க தோணும் படம் பார்த்தவர்களிடமிருந்து அன்பு வெளிப்படும் எனவும் கூறியுள்ளார்.