உலக செய்திகள் செய்திகள் அதிபர் தேர்தலில் கமலா ஹரரிஸ்…பிரச்சாரத்தை தொடங்கினர்…!!! Sathya Deva23 July 2024086 views அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்வதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். அவர் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹரரிஸ் முன்மொழிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக இணையதள பதிவில் “ஜனநாயக கட்சியினரே, எனது வேப்புமனுவை எற்க வேண்டாம். எஞ்சியிருக்கும் பதவிக்காலம் முழுக்க அதிபராக எனது கடமைகளில் முழு ஆற்றலை செலுத்த முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார். இந்த தேர்தலில் கமலா ஹரரிஸ்க்கு முழு ஆதரவு கொடுப்பதாகவும், ஜனநாயகவாதிகள் ஒன்று கூடி ட்ரம்மை தோற்கடிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். எந்த தேர்தலில் கமலா ஹரரிஸ் வென்றால் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்று சாதனையை பெறுவார்என கூறப்படுகிறது . அதிபர் வேட்பாளராக கமலா தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.மேலும் பைடனின் செயலகம் கமலா பிரச்சார செயலகம் என்று பெயர் மாற்றப்பட்டு உள்ளது என தெரிவித்தார். ஜோ பைடன் அவர்கள் வேட்பாளராக பெறப்பட்ட மில்லியன் டாலர் பிரச்சார நிதியே கமலா அவர்களுக்கு பிரச்சாரத்திற்கு மாற்றி கொடுக்கும் வேலைகளில் இறங்கி உள்ளார்என குறிப்பிடப்படுகிறது.