தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். அக்டோபர் மாதம் ரிலீசாகும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதனையடுத்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இவர் ”சூர்யா 44” என்ற படத்தில் நடித்து வருகிறார்.
பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், இந்த படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு சிறை என டைட்டில் வைத்திருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.